பெண்களே! ஒன்று சேருங்கள்!

பெண்ணாகப் பிறப்பது படுக்கைக்கா?
படிப்பித்தல் என்பது இன்று இருக்கா?
கருவாகப்பிறப்பதும் வளர்வதும் 
கயவரின் கரத்தில் உயிரிழக்கவா?


என்ன செய்யப் போகிறோம்?
எண்ணற்றப் பெண்கள்
பலியான வரிசையில்
இப்பொழுது
நந்தினியும் ஹாசினியும்
இன்னுமெத்தனை வெளிவரவில்லையோ
ஐயோ! பதறுதே உள்ளமும்
என்ன செய்யப் போகிறோம்?

பெண்ணாகப் பிறப்பது படுக்கைக்கா?
படிப்பித்தல் என்பது இன்று இருக்கா?
கருவாகப்பிறப்பதும் வளர்வதும் 
கயவரின் கரத்தில் உயிரிழக்கவா?
பெண்களே! ஒன்று சேருங்கள்!
உடன்பிறந்தோருக்கும் பிள்ளைகளுக்கும்
ஒழுக்கம் ஓதுவோம்!

பெண்களே! ஒன்று சேருங்கள்!
பெண்ணைக் கேலிசெய்வதை எதிர்ப்போம்
நகைச்சுவையாகவும்!
பெண்ணை அடக்குவதை எதிர்ப்போம்
எந்த வழியிலும்!
நாம் அமைதி காக்கும்வரை
நீதி கிடைக்கப்போவதில்லை!

என்ன செய்யப் போகிறோம்?

ஒருவரும் தூற்றக்கூடாது
பெண்ணை நம்மருகில்!

ஒருவரும் கேலிசெய்யக் கூடாது
பெண்ணை நம்மருகில்!
குரல் எழுப்புவோம்!
பெண்களே! ஒன்று சேருங்கள்!



14 கருத்துகள்:

  1. என் ஆதரவுக் கரத்தையும் உயர்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம், பெண்களைக் குறிப்பிட்டாலும் அனைவரின் பங்களிப்பும் வேண்டும்.

      நீக்கு
  2. அனைவருக்கும் ஒழுக்கமே உயிர் மூச்சாக இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா. அப்படியொரு சமூகம் உருவாக்கவேண்டும்.
      நன்றி அண்ணா.

      நீக்கு
    2. ஆமாம் அண்ணா. அப்படியொரு சமூகம் உருவாக்கவேண்டும்.
      நன்றி அண்ணா.

      நீக்கு
  3. மனம் துடிக்கின்றது..
    அந்த அரும்பின் ஆன்மா சாந்தியடையட்டும்..

    பதிலளிநீக்கு
  4. இதோ உங்கள் வரிகளுக்கு எங்கள் கரங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!!! நல்ல ஒழுக்கமான சமூகம் உருவாக வேண்டும்.

    இங்கு நாற்காலியைச் சுற்றி ம்யூசிக்கல் சேர் விளையாட்டு வன்மமாக நடந்து கொண்டிருக்கின்றது, இதில் இவர்களுக்கு நந்தினியாவது, ஹாசியாவது கண்ணில் பட! போலீஸ் கூட எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை பாருங்கள்...வெட்கக் கேடு...ஊடகம் உட்பட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா, கீதா.

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. வேதனைதான்.
      மிகக் கேவலமான நிலைமை.

      நீக்கு
  5. பெண்கள் மட்டும்தானா...
    நாங்களும் இணைகிறோம்...
    ஒழுக்கம் என்பது அனைவருக்கும் உயிர் மூச்சாய் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணமும்.

    பதிலளிநீக்கு
  6. ஒழுக்கம் சிறுவயதிலேயே வீட்டிலும் பள்ளியிலும் சொல்லி வளர்க்க வேண்டும். அது மட்டுமல்ல பெண்களுடன் நல்ல மூறையில் பழக அனுமதித்து அவ்ர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுதரவேண்டும் அப்படி செய்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் அதற்காக உங்களுடன் கைகோர்த்து இன்று முதல் சிறுவர்களுக்கு மட்டுமல்ல வயது வந்தவர்களுக்கும் அறிவு புகட்டுவோம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...