ஏழ்மையின் எதிர்பார்ப்பு



வான்மழை பொய்க்காமல்  வள்ளன்மை  காட்டுமா?
கான்செழித்து மண்ணின் கலக்கத்தை நீக்குமா?

காதல் ஓய்வதில்லை

Image: thanks Google

ஊற்றெடுக்கும் கவிதைகளை
ஒவ்வொன்றாய் அனுப்புகிறேன்
மூச்சடைக்கும் என்பதால்

காதல் எனும் ஒரு வழிப்பாதை




உன்னில் நானும்
என்னில் நீயும்
உயிரில் ஒன்றானபின்
உவக்கும் வாழ்வு அது
ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை

சட்னி சாட்சி


அவசர வேளையில் அனுமதியின்றியே 
அத்துமீறி நுழையும் 
இலவச அடுமனை ஆச்சரியங்கள்!!
Image:thanks Google

செங்குருதி ஞாயிறு


 முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 

 எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத்  தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.  


அன்பின் தினம்



ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்


முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 

ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி  சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும்  எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.


உணர்ந்துநீ பிழை


கூரை கழுவியபின்
வீதி சேரும் மழை;
கூட்டிப் பெருக்கும் குப்பை
வீதி முனையில் குவியும்;
வாய்ப்பிருந்தால் அதுவும்
ஆயாசமின்றி அண்டை நிலத்தில்!

ஜிம்மி லீ ஜாக்சன்

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 


         விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.

இயந்திரங்களுக்கே

கூட்டமாய்க் கட்டிடங்கள்
கூடிப்பேச மனிதரில்லை
நகர மயமாக்கல்
தண்ணீர் சூழாத் தீவுகள்!


பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...